Header Ads



நேற்று இரவு நடந்த, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் தொகுப்பு

நேற்று இரவு 2018 மார்ச் 8 முஸ்லிம்கள் மீது நடைப்பெற்ற அத்து மீறல்களின் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள்.

மஹியங்களை வீதியில் ஹஸலகவில் மாசதும்ம என்ற முஸ்லிம் கிராமத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு வீடு ஒரு லொறி என்பன எரியூட்டப்பட்டிருக்கிறது.

கல்முனையில் இருந்து கொழும்புக்குச் சென்ற பஸ்ஸிற்கு வெலிகந்தயில் வைத்து கல்வீச்சு.

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் போன சீமா சொகுசு பஸ்மீது செவனபிடியவில் வைத்து கல்வீச்சு.

மினுவாங்கொட யஹபாலவத்தையில் இருக்கும் மத்ரசாவிற்கு பெற்றோல் குண்டு வீச்சு.

பண்டாரவெல ஹெலிஓய மத்ரஸா மீது பெற்றொல் குண்டு வீச்சு.

திருக்கோவிலைச் சேர்ந்த கஸ்மின் ட்ரெவெல்ஸ் பஸ்ஸின் மீது மன்னம்பிடியவில் வைத்து கல்வீச்சு.

பேருவளையில் சிராஜ் என்பவரின் ஹோட்டலின் மீது கல்வீச்சு

கந்துரட குடை தொழிற்சாலை மீது பொற்றோல் குண்டு வீச்சு.

பானந்துறையிலும் பள்ளிக்கு அண்மையில் உள்ள ஹேட்டலில் கண்ணாடிகள் உடைப்பு. 

ThaiTv News

No comments

Powered by Blogger.