Header Ads



கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, ஜம்இய்யத்துல் உலமா அழைப்பு

கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. 

இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது சகல மாவட்ட, பிரதேசக் கிளைகளை வேண்டிக் கொள்கின்றது. மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும்; அனைவரும் இவ்விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் ஜம்இய்யா அன்புடன் வேண்டிக் கொள்கின்றது. 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடாக உதவிகள் செய்ய விரும்புவோர் தமது நிதியை கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் எதிர்வரும் ஜும்ஆக்களில் நிவாரண உதவிகளை (பணமாக) சேமித்து இவ்வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் அது பற்றிய தகவலை 0117-490490 என்ற இலக்கத்தினூடாக எமக்கு அறியத்தருமாறும் சகல பள்ளிவாயல்களின் நிருவாகிகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம் 

COMMERCIAL BANK
ALL CEYLON JAMIYYATHUL ULAMA
A/C  NO 1901005000
COMMERCIAL BANK
BRANCH : ISLAMIC BANKING UNIT 
SWIFT CODE : CCEYLKLX


AMANA BANK
ALL CEYLON JAMIYYATHUL ULAMA
A/C  NO 0010112110014
AMANA BANK 
BRANCH : MAIN BRANCH

SWIFT CODE : AMNALKLX 


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2 comments:

  1. My suggestion! Use portion of Halal certificates money for victims.

    ReplyDelete
  2. AGAIN THE POOR VULNERABLE MUSLIMS AND EXPATRIATES ARE MISLEAD.
    WHAT HAPPENED TO THE Rs. 200 MILLION COLLECTED BY THE ACJU/NATIONAL SHOORA COUNCIL DURING THE ALUTHGAMA/BERUWELA/DHARGA TOWN VIOLENCE PLEASE? ACCOUNTABILITY AND TRANSPARENCY IS STILL QUESTIONABLE EVEN
    NOW?
    THIS IS A WOUND INFLICTED ON US BY OUR OWN. LET'S NOT RUSH IN EMOTION. LET'S BE PATIENCE, Insha Allah. LET US ALLOW THE GOVERNMENT TO DO THE NEEDFUL, EVEN IN PROVIDING COMPENSATION AND DAMAGES, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.