Header Ads



வன்கூவரில் இலங்கை, முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் நடந்த வன்முறைகளை கண்டித்து  கனடாவின்  பெரிய நகரங்களில் ஒன்றான வன்கூவரில் இலங்கை முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

வன்கூவரில் வசிக்கும் இலங்கை புலம்பெயர் முஸ்லிம்களின் ஏற்பாட்டில் வன்கூவர் நகர் மத்தியில் அமைந்துள்ள ஆட்கலரியில் இடம்பெற்ற இந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என பாராது அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இனவாதம், மதவாதம், மொழவாதம் எங்களுக்கு வேண்டாம். அமைதியே வேண்டும் போன்ற கோஷங்கள் பிரதானமாக இருந்தது.

இங்கு டாக்டர் நஜிமுதீன் மற்றும் சகோதரர்களான ஸகி ஜுனைத், ஹிஸ்புல்ரஹுமான், ரொஷான், பெரோஸ், நஸ்மி, மஸாஹிர் என பலர் உரையாற்றினர்.

சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் நடந்த இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சில மலையக தமிழர்களும் தமிழ்நாடு தமிழ்முஸ்லிகளும் கலந்துகொண்டதை கானக்கூடியதாக இருந்தது.

 இதன்போது பாதசாரிகளுக்கு இந்த பிரச்சினை பற்றி எடுத்துச்சொல்வதிலும் பிரசுரங்கள் வழங்குவதிலும் அதிகமான சகோதரர்கள் ஈடுபட்டுக்ககொண்டிருந்ததை பார்க்கக்கூடியதாக இருந்தது.

Zacky junaid, Vancouver.


No comments

Powered by Blogger.