Header Ads



அதிகாரத்துக்குவர மகிந்தவுக்கு, வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - மைத்திரி அணியும் ஒட்டிக்கொள்ளலாம்

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளதாக இந்தியாவிலிருந்து வௌிவரும் பிரபலமான செய்திப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் தோல்வியைத் தழுவிய மகிந்த, அடுத்து இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் உரிய இலக்கை எட்டத் தவறினார்.

ஆனால் சிறிதும் மனந்தளராத அவர், அரசியல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் வழங்குவதையே அவர் தமது முழு நேரப் பணியாகக் கொண்டிருந்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் தமது பக்கம் இழுத்துக் கொண்டார். கூட்டு எதிரணியொன்றும் அவரது தலைமையில் அமைக்கப்பட்டது.

சில அரசியல் கட்சிகளும் இதில் இணைந்து கொண்டன.பின்னர் தனியான புதிய அரசியல் கட்சியொன்றையும் அவர் அமைத்துக் கொண்டார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட அவரது கட்சியான பொதுமக்கள் முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. இந்த வெற்றியின் மூலமாக அரசுக்கு சவால் விடுக்கின்ற அளவுக்கு மகிந்த தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் மகிந்தவால் போட்டியிட முடியாது என்பதால், இவரது ஆதரவு பெற்ற வோறொருவர் போட்டியிடுவதை எதிர்பார்க்க முடியும்.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் நிச்சயமாகப் போட்டியிடுவார்.தற்போதுள்ள நிலவரங்களைப் பார்க்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கணிசமான ஆதரவாளர்கள், மகிந்த பக்கம் தாவிச் செல்வதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேன தேர்தல்களிலிருந்து ஒதுங்கி நிற்கக் கூடிய ஒரு சூழ்நிலையும் தோன்றியுள்ளது. இரண்டாவது தடவையும் தாம் ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென அவர் ஏற்கனவே அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்ற போதிலும், நடந்து முடிந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது வாக்கு வீதத்தில் வீழ்ச்சியே காணப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பெற்ற சுமார் 47 சதவீதமான வாக்குகளுக்கு எதிராக மகிந்தவின் கட்சியால் 44 வீதமான வாக்குகளையே பெற முடிந்துள்ளது.

இந்த நிலையில் ஆசனங்களின் எண்ணிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு மகிந்தவின் செல்வாக்கு உயர்ந்து விட்டதாகக் கூறுவது சரியானதல்ல. இதைவிட சுமார் 10 சதவீதமான வாக்குகள் வௌியில் உள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த தடவை ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் இந்த வாக்குகளே பிரதான இடத்தை வகித்தன. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை வேட்பாளர் ஒருவர் பெற வேண்டும் என்பதால், மகிந்த தரப்பினருக்கு இன்னமும் சுமார் 6 சதவீதமான வாக்குகள் தேவையாகவுள்ளன. இதைத் தேடவேண்டிய கட்டாயமும் மகிந்தவுக்கு உள்ளது.

இதேவேளை ஜனாதிபதிக்கான தேர்தலில் தற்போதைய பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நிச்சயமாகப் போட்டியிடுவார் எனத் தெரிகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம், அல்லது மகிந்த தரப்புக்கு ஆதரவு வழங்கலாம் என்ற நிலைப்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு மகிந்தவுக்குக் கிடைக்கு மானால், அவரது நோக்கம் நிறைவேறி விடும்.தற்போது நாட்டில் நிலவுகின்ற சிக்கலான அரசியல் சூழ்நிலையில் எது குறித்தும் உறுதியாகக் கூறிவிட இயலாது. இறுதி நேரத்தில்கூட மாற்றங்கள் ஏற்படலாமென்ற நிலையே காணப்படுகின்றது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் எந்த முடிவையும் எடுக்க முடியாதென்பதை நினைவில் கொள்வது நல்லது.

ஆனால் 2020 ஆம் ஆண்டு, மாற்றத்துக்கான ஓர் ஆண்டாக அமையுமெனக் கூறப்படுகின்றது. ஆனால் எத்தகைய மாற்றம் ஏற்படுமென்பதை இப்போதே எதிர்வு கூற முடியாது.

கடந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் மகிந்த தோற்பாரென எவருமே நம்பவில்லை. ஆரம்பத்தில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களே அதிக அளவில் காணப்பட்டன.

இறுதியில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் வாக்குகளே மைத்திரியின் வெற்றியை உறுதி செய்தன. இதைப் போன்றதொரு நிலை 2020 இலும் நடைபெறாதெனக் கூற இயலாது.

3 comments:

  1. "The Muslim Voice" believes what the Indian newspaper has written is correct. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and it's Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government, has been betrayed and dumped in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered with out a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela, Insha Allah.
    Noor Nizam.
    Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. இந்தச் செய்திகள் யாவும் குறித்த பத்திரிகைக்கு உரிய கைம்மாறு செய்யப்பட்டால் அவர்கள் அழகாகவும் நேர்த்தியாகவும் மக்களைக்கவரும் மொழியிலும் செய்தி வௌியிடுவார்கள். அந்த விளையாட்டை மஹிந்த கம்பனி சிறப்பாக செய்துவிட்டு அதை இது போன்ற பத்திரிகைகளில் வௌிவர பெருமைப்பட காத்துநிற்கின்றது. ஆனால் பத்திரிகைக்கலாசாரமும் சாணக்கியமும் நன்கு அறிந்து வைத்திருக்கும் தகவல் ஊடகங்கள் அது பற்றி அக்கறை கொள்வதில்லை.

    ReplyDelete
  3. iwar nanraka panam selawalikkurar ungkalukku ewwalawu koduttar

    ReplyDelete

Powered by Blogger.