Header Ads



இலங்­கை சிறு­பான்­மை­யினர் மீது வன்­மு­றை, வைராக்கியம் வேண்டாம் - சர்வதேசம் வலியுறுத்து


இலங்­கையில் சிறு­பான்­மை­யின மக்கள் மீது முன்­னெ­டுக்­கப்­படும் வன்­மு­றைகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும். வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­க­ப்பட வேண்­டி­யது அவ­சியம் என்று  ஜெனிவா  மனித உரி­மை­பே­ர­வையில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா ஜெர்மனி, சுவிட்­ஸர்­லாந்து மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பல்­வேறு நாடுகள் கூட்­டாக இணைந்து அறி­வித்­தன.

ஜெனிவா மனித  உரிமை பேர­வையில் நேற்று நடை­பெற்ற  இலங்கை  ஜெனிவா

  பிரே­ர­ணையை எவ்­வாறு  அமுல்­ப­டுத்­தி­யது என்­பது  குறித்­தான   விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே    உறுப்பு நாடுகள் இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டின.  

2015 ஆம் ஆண்டு  இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு   இரண்டு வருட கால நீடிப்­புக்­குள்­ளான  பிரே­ர­ணையை  இலங்கை அர­சாங்கம்  எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த    ஐ.நா.  மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனின் அறிக்கை மீதான விவா­தமே இவ்­வாறு நடை­பெற்­றது.    

முதலில் பிரித்­தா­னியா பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்,

நாங்கள் அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து எமது நிலைப்­பாட்டை இலங்­கைக்கு அறி­விக்­கிறோம். ஐ.நா. பிரே­ர­ணையின் பரிந்­து­ரை­களை இலங்கை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். மனித உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்டும். காணாமல் போனோர் அலு­வ­லகம் சாத­க­மாக இருக்­கி­றது. ஆனால், தாம­த­மான நிலை­மையே எமக்கு அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­து­கி­றது. சிறு­பான்மை இன மக்கள் மீதான வன்­மு­றையை நிறுத்த வேண்டும். வைராக்­கிய பேச்சை நிறுத்த வேண்டும்.  அதி­கார பர­லா­வக்­கலை முன்­னெ­டுத்து காணாமல் போனோர் மீதான உண்­மையை அறிய வேண்டும் என்றார்.

பல்­கே­ரியா பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்,

ஐரோப்­பிய ஒன்­றியம் சார்­பான இந்த அறிக்­கையை விடுக்­கிறோம். இலங்­கையை மனித உரி­மைகள் மீதான அக்­க­ரையை செலுத்த வேண்டும். சில கார­ணிகள் சாத­க­மாக இருக்­கின்­றன. ஆனால், பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட்டு நல்­லி­ணக்கம் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றார்.

ஜெர்மன் நாட்டின் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்,

இலங்­கையின் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. காணாமல் போனோர் ?அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும். வன்­மு­றைகள் நிறுத்­தப்­பட வேண்டும். சிறு­பான்­மை­யி­னரின் உரிமை பாது­காக்­கப்­பட வேண்டும் என்றார்.

சுவி­ஸர்­லாந்து நாட்டின் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்,

சிறு­பா­னர்­மை­யி­ன­ருக்கு எதி­ரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமம். வன்முறைகளை ஏற்படுத்தும் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும். ஜெனிவா பிரேரணைகளை பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும். சரணடைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல்களை வெ ளியிட வேண்டும்

2 comments:

  1. May allah save our beautiful nation from recism people

    ReplyDelete
  2. சானா பலீல்!
    ஒரு முஸ்லிம் நாடுகளும் சொல்லவில்லை! சொன்னது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா!
    இவர் வந்து அல்லா காப்பாத்துவாராக என்கிறார்!
    ஒருவேளை அல்லா சுவிஸ், ஜேர்மனி அமெரிகாக்காரனின்ர மண்டைக்குள்ள ஏறியிட்டானோ? அல்லது முஸ்லிம் மண்டைக்க சொன்னாலும் ஏறாது மேற்குலகுக்காரனிட்ட சொன்னாத்தான் சரி எண்டு நினைச்சுட்டானோ அல்லா!

    ReplyDelete

Powered by Blogger.