Header Ads



சுவாசப் பையை புகை நிரப்­பி­யதால், அப்துல் பாசித் மரணம் - பொலிசார் கூறும் காரணம்


கண்டி மாவட்டம் முழு­வதும் கடந்த மார்ச் 4 ஆம் திகதி இரவு முதல் பதி­வான  வன்­முறைகள் கர­ண­மாக இரு உயிர்கள் காவு­கொள்ளப்­பட்டு மேலும் 11 பேர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 

பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர  தெரி­வித்­த­தா­வது,

மார்ச் 5 ஆம் திகதி வன்­மு­றை­யா­ளர்­களால் கொளுத்­தப்­பட்ட கடை மற்றும் வீட்­டுடன் கூடிய கட்­ட­டத்­துக்குள் இருந்து 26 வய­தான இளைஞர் (அப்துல் பாசித்)  ஒருவர் மீட்­கப்­பட்­டி­ருந்தார். 

புகை அவ­ரது சுவாசப் பைகளை நிரப்­பி­யதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளமை பிரேத பரிசோதனை ஊடாக  உறுதியாகியுள்ளது. 

எனினும் தீ வைப்பு ஒரு திட்டமிட்ட குற்றச் செயல் என்பதால்  அந்த மரணம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியோரைக் கைதுசெய்ய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான குழுவொன்றினை விசாரணைக்கு அனுப்பியுள்ளார் என்றார்.

No comments

Powered by Blogger.