Header Ads



தம்புத்தேகமவில் தாக்குதல், ஜே.வி.பி. கண்டனம்


தம்புத்தேகமவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜே.வி.பி. கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தங்களது பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுத்த போராட்டத்தின் மீது அரசாங்கம் பொலிஸாரைக் கொண்டு நடத்திய அமானுஸ்ய தாக்குதல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

மக்களின் கண்களைக் கட்டி ஆபத்தான திட்டங்களை முன்னெடுத்தால் இவ்வாறான எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும்.

பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்றால் மக்களுக்கு இந்த விடயம் பற்றி தெளிவூட்டியிருக்க வேண்டும் அல்லது ஆபத்தான திட்டத்தை இடைநிறுத்தியிருக்க வேண்டும்.

எனினும் அரசாங்கம் நீதிமன்றின் உதவியை நாடி போராட்டக்காரர்களை பொலிஸாரைக் கொண்டு தாக்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னரே இந்த திட்டம் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை இடைநிறுத்தியிருந்தால் மக்கள் போராட்டத்தை நடத்தியிருக்க மாட்டார்கள்.

மக்களின் போராட்டங்களின் நியாயத்தை புரிந்துகொள்ளாது அவர்களின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி அவர்களை ஒடுக்குவது அரசாங்கங்களின் மரபணுக்களிலேயே உள்ளது.

இந்த அரசாங்கமும் இதேவிதமான கொள்கைகளைப் பின்பற்றி மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்துவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

1 comment:

  1. Why this shit Police did not do this kind of action in Ampara???
    Terror Government...

    ReplyDelete

Powered by Blogger.