Header Ads



"நேற்று பள்ளிவாசலை தாக்கியவர்கள், கொழும்பில் நிறுவனமொன்றில் வேலை செய்பவர்கள்"

இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் “நேற்றுக்காலை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், பள்ளிவாசல் மீது கற்களை வீசினர். காவல்துறையினர் அங்கு சென்றதும், அவர்கள் ஒரு மோட்டார் சைக்கியையும் கைவிட்டு தப்பியோடி விட்டனர்.

மோட்டார் சைக்கில் உரிமையாளரை அடையாளம் கண்டு, இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கரந்தெனியவையும், ஒருவர், மீரிகமவையும் சேர்ந்தவர்கள். கொழும்பிலுள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.

கண்டியில் 3000 காவல்துறையினரும், 750 சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.