அடுத்துவரும் தேர்தல்களில் வெற்றிபெற, தற்போதிருந்தே வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்
புதிய அரசமைப்பு பற்றிப் பேச தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பொருத்தமாக இல்லை. அரசின் நெருக்கடிகளைக் கருத்தில்கொண்டு அரசியல் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பு, குறித்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிடைக்கும் வாக்குகளைப் பறிக்கும் சூழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
அடுத்து வரவுள்ள மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெற தற்போதிருந்தே வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நடுத்தர மக்களை இலக்கு வைக்க வேண்டும் என்றும் அங்கு வைத்து திருவாய் மலர்ந்துள்ளார் அவர்.
That mechanism is already started in Ampara
ReplyDeleteit is too late........
ReplyDelete