மௌலவி சதகத்துல்லாஹ் படுபாவிகளால் தாக்கப்பட்டதை, ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்களில் ஒருவரும் காழி நீதவானுமாகிய அஷ்ஷைக் ஏ.சி.எம். சதகத்துல்லாஹ் அவர்கள் கடந்த வாரம் தாக்கப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய மலைநாட்டில் சிங்கள மொழிமூலம் சன்மார்க்க பிரச்சாரம் செய்யும் இவர் கண்டி மாவட்டத்திலுள்ள சர்வ சமயத் தலைவர்களின் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராவார். சகலரோடும் நன்றாகப் பழகும் இவர்களை தலையில் அடித்துத் தாக்கி இரத்தம் சிந்தச் செய்த படுபாவிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். வயதில் முதிர்ந்த ஒருவரை எந்த மனிதாபிமானமற்ற முறையில் சமயத் தலைவர்களில் ஒருவரென கூட மதிக்காது நடந்து கொண்ட இக்காடத்தனத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அன்னாருக்கு பூரண சுகம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கும் அதே வேளை சம்பந்தப்பட்டோரை சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொறுப்பு வாய்ந்தவர்களை கேட்டுக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Who will take action?
ReplyDeleteLetta vandalum latest a varuvanungal perutchaligal
ReplyDeleteWho beat?
ReplyDeleteAccept it as God's punishment for being in SLJUS. People now mostly hate this organisation after finding it is useless in the riots.
In fact, this must be aimed atit's gang leader.