Header Ads



கண்டி மக்களை வீட்டினுள், இருக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

கண்டி மாவட்ட மக்களுக்கு அரசாங்கம் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

காலவரையறையற்ற வகையில் கண்டியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கண்டி வாழ் பொது மக்கள் அனைவரையும் வீட்டினுள் இருக்குமாறு பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.

வெளியில் சென்று அநாவசிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கண்டி நிர்வாக மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

No comments

Powered by Blogger.