Header Ads



தெல்தெனியாவில் கைதானவர்களை விடுவிக்க, சிங்கள எம்.பி. முயற்சி

தெல்தெனியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லிம் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றசசாட்டில் கைதானவர்களை விடுவிக்க மஹிந்த ஆதரவு எம்.பி.யான திலும் அமுனுகம முயற்சித்துள்ளார்.

மத்திய மாகாண ஐ.தே.க. உறுப்பினர் லாபிர் ஹாஜியார் இத்தகவலை ஜப்னா முஸ்லிம் இணையத்திட்ம் கூறினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தெல்தெனியா பொலிஸ் நிலையம் சென்ற திலும் அமுனுகம கைதான சிங்கவர்களi விடுவிக்க முயற்சித்துள்ளார், அது பயனளிக்காத நிலையில், இன்று அதிகாலை மீண்டும் பொலிஸ் நிலையம் சென்று கைதான சிங்களவர்களை விடுவிக்க முயற்சித்துள்ளார்.

எனினும் பொலிஸார்  இதற்கு அனுமதியளிக்கவில்லை. இந்நிகழ்வின் மூலம் தெல்தெனியா சம்பவத்தை பெரிதாக்கி மஹிந்த ஆதரவு எம்.பி. முயற்சிப்பதுடன், குற்றவாளிகளை காப்பாற்ற முயலுவது பாரிய சட்டவிரோத குற்றமாகும் என லாபிர் ஹாஜியார் மேலும் சுட்டிக்காட்டினார்,

1 comment:

  1. Please don't trust the politicians at this moment.

    ReplyDelete

Powered by Blogger.