Header Ads



"கோட்டாபயவிற்கும் எனக்கும் எவ்வித இரகசிய சந்திப்புக்களும் இடம்பெறவில்லை"

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கும் தனக்கும் எவ்விதமான இரகசிய சந்திப்புக்களும் இடம்பெறவில்லை என சுகாதார அமைச்சரும் , அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று -21- இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். 

சமகால அரசியல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக ஊடகங்களில் செய்தி வௌியானது. 

இந்நிலையில் , அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறித்த செய்தியினை மறுக்கின்றீர்களா என செய்தியாளர்கள் தொடர்ந்து வினவினர். 

இதற்கு பதிலளித்த அவர் , நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் சுமார் 15 நிமிடங்கள் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் , அதன் பின்னர் இதுவரைக்காலம் தனக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் எந்தவொரு சந்திப்பும் இடம்பெறவில்லை என கூறினார். 

அத்துடன் , அவருடன் இரகசிய கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு இதுவரை எந்தவொரு தேவையும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.