போலி பிக்குவை பிடித்து, பொலிசிடம் ஒப்படைத்த மக்கள்
விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு பணம் வசூல் செய்து வந்த போலி புத்த பிக்குவையும் இளைஞர் ஒருவரையும் மஹியங்கனை பிரதேச இளைஞர்களினால் பிடித்து, மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது.
பணம் வசூல் செய்த புத்தபிக்கு மீது மஹியங்கனை பிரதேச இளைஞர்களுக்கு சந்தேகம் ஏற்படவே அவர்கள் குறித்த பிக்குவையும் அவருடன் உதவிக்கு வந்த இளைஞரையும் விசாரணை செய்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் புத்த பிக்குவைப் போன்று குறித்த நபர் வேடமிட்டு வந்துள்ளார் என்பதையும் மற்றையவர் அவருக்கு உதவியாளர் போன்று வந்து மக்களை ஏமாற்றி பணம் சேகரிப்பவர் என்றும் தெரிய வரவே இருவரையும் பிரதேச இளைஞர்கள் நையப்புடைத்துள்ளனர். பின்பு மஹியங்கனை பொலிஸாரிடம் இது குறித்து முறைப்பாடு செய்யவே அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்ததில் இருவருமே பணம் பறிக்க செய்த நாடகம் என தெரியவந்துள்ளது.
மேலும் இவ்விருவரும் பயணித்த ஆட்டோ நிதி வசூல் செய்வதற்கு தயாரிக்கப்பட்ட போலி ரசீதுப் புத்தகங்கள் 25யும் வசூல் செய்யப்பட்டிருந்த 5880 ரூபா பணம் மற்றும் காவி உடைகள் சிலவற்றையும் மஹியங்கனைப் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்விருவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் பின்னர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என மஹியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் அமரக்கோன் தெரிவித்தார்.
The monks behind the riots also may be like these....
ReplyDelete