Header Ads



"சிலரை மட்டும் கைதுசெய்து, பிரச்சினை தீர்ந்து விட்டதாக ஏமாற்றக் கூடாது"

திகன கலவர சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலரும் கைது செய்யப்படவில்லை. சிலரை மட்டும் கைது செய்து பிரச்சினை தீர்ந்து விட்டதாக ஏமாற்ற முயலக் கூடாது என  இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நம்பிக்கைப் பொறுப்புகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எல்லோருக்கும் சட்டம் சமமாக இருக்க ​வேண்டும். அரசியல் வாதியாக இருந்தாலும் பொதுமகனாக இருந்தாலும் மதத் தலைவராக இருந்தாலும் சட்டம் சகலருக்கும் சமமாக செயற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

1983 கலவரம் முதல் கலவரங்களினால் உயிரிழப்புகள் சொத்து சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.

மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டை குட்டிச்சுவராக்க சில சக்திகள் முயல்கின்றன

கடந்த அரசில் இடம்பெற்ற அளுத்கம சம்பவத்தை தொடர்ந்து சிறுபான்மை சமூகங்கள் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அளுத்கமவையை விட மிக மோசமான சம்பவங்கள் இந்த நல்லாட்சியில் நடந்துள்ளது. 

No comments

Powered by Blogger.