Header Ads



கண்டியில் 8 பேர் படுகாயம்

கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை காரணமாக 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் பலர் அதனை கண்டுகொள்ளாமல் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கட்டுகஸ்தொட்ட, அம்பதென்ன, செனரத்கம, மடவல, அலதெனிய, உல்லதுபிட்டிய, மெனிக்ஹின்ன, பூஜாபிட்டிய ஆகிய பிரதேசங்களில் இந்த மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

Powered by Blogger.