Header Ads



ஆனமடுவயில் முஸ்லிம் ஹோட்டலை, தாக்கிய 7 இளம் வயதினர் கைது

ஆனமடுவ நகரில் உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (11) அதிகாலை 2.00 மணியளவில் இந்த பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இத்தாக்குதலில் ஹோட்டல் முழுமையான தீயில் எரிந்தது.

குறித்த உணவகத்துக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி. கெமராவில் பதியப்பட்டிருந்த காட்சிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இவர்களுக்கு எதிரான சட்டங்களை நடவடிக்கைகளை அவசரகாலச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் ஆனமடுவ மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

DC

No comments

Powered by Blogger.