Header Ads



5 நேரமும் தொழுது, அமைதியாக வாழ்பவர்கள் முஸ்லிம்களே - வலுக்காரம விகாரதிபதி


திகன நகரத்தில்  ரஜவெலவில் உள்ள  மஜ்ஜிதுல் நுாா்  ஜூம்ஆப் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (13) நல்லிணக்க கூட்டமொன்றினை மெனிக்கேன்ன பிரதேசய செயலாளா் தலைமையில்  இக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்  வலுக்காரம விகாரதிபதி  அங்கு உரையாற்றுகையில் -

இருந்தும் தற்போது  வளா்ந்து வரும் இளைஞா் பரம்பரையினா்கள் ஒரு வித்தியசமான ஒரு யுகத்தில் வாழ்கின்றனா்.  

எமது பண்டைய கால  பரம்பரையினா்  ஜக்கியம் அந்நியோன்னியம்  நட்பு முறைகள் தற்போதைய இளம் பரம்பரையினா்களுக்குத் தெரியாது.  

அவா்கள் செய்த இந்த நாசகார செயல்களினால்  நாட்டுக்கு ஏற்படும் இழுக்குகள் பற்றி சிந்திப்பதில்லை.  

அவா்கள் ஒரு புதிய நவீன சமுக வலையத்தளங்கள் கவரப்பட்டு இவ்வாறான மூலை சலவைகளில் வன்முறையில் ஈடுபடுகின்றனா்.         

முஸ்லீம்கள் எவ்வித பிரச்சினைகள்  இல்லாத அமைதியான சமுகம் அவா்கள்  தத்தமது தொழில் ,வியாபாரத்தினைக் கவனித்துக் கொண்டு  5 நேரமும் பள்ளிவாசலகளுக்குச் சென்று தமது மதக்கடைமைகளை  சரிவர  நிறைவேற்றிக் கொண்டு   அமைதியாக வாழும் சமுகமாகும்.  

முஸ்லீம் மக்களோடு நாங்கள் கல்வி கற்கும் காலம் தொட்டு பழைய பரம்பரையினா் மிகவும் அன்நியோன்னியமாக வாழ்ந்து வருகின்றோம்.   அந்த உறவுகள் நட்புகள்  ஜக்கியம் தற்போதைய இளம்  சமுகத்தினா்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை    என   அவா் அங்கு விகாரதிபதி  தெரிவித்தாா்ா 

No comments

Powered by Blogger.