5 பேர் பலி - அல்லிப்பூ பறிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்து சோகம்
நிலாவெளி - பெரியகுளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சடலம் நிலாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பெரிய குளத்தில் அல்லிப்பூ பறிக்கச் சென்றவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment