Header Ads



கல்முனை 4 துண்டாகிறது - அமைச்சரவையிலும் அங்கீகாரம்


திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று (27) இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து கல்முனைத் தொகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

இது தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு  இந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று அதன்படி உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்படவுள்ளன.

ஆனால் சாய்ந்தமருதுவின் எல்லைகள் ஏலவே குறித்தொதுக்கப்பட்டு இனங்காணப்பட்டுள்ளதால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையே முதலாவதாகவும் விரைவாகவும்  ஸ்தாபிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் பைசர் முஸ்தபாவினால் இற்கான அமைச்சரவைப் பத்தரம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

8 comments:

  1. அப்போ ரணில் கொடுத்த உத்தரவாதம்

    ReplyDelete
  2. சித்தீக் காரியப்பரின் செய்தியே தவிர அமைச்சரவையின் செய்தி அல்ல. நான்கு பிரேச சபைகளின் எல்லைகளும் இனங்காணப்பட்டதன் பிட்பாடே இந்த பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் கல்முனை மாநகர சபை முஸ்லீம் மக்கள் உறுதியாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். அதட்காக இப்பிரதேச மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து உடனடியாக செயட்படுவார்கள் என்றும் நம்புகிறோம். நிட்சயம் பிரதேச வாதிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
    இது மிகவும் இலகுவாக நடக்கப்போகின்ற விடயம் அல்ல. இதில் மாபெரும் சிக்கல் உள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரமும், அரசியல் இருப்பும் இந்த விடயத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட போகிறது என்பதை இந்த இடத்தில் சுட்டி காட்ட விரும்புகிறோம். தமிழ் தரப்பும் முஸ்லீம் தரப்பும் இதில் இணக்கப்பாடு காணுவது என்பது இலகுவான விடயம் அல்ல. நிட்சயம் இந்த விடயம் கடும் சச்சரவையும் குழப்பங்களையும் உருவாக்கும் என்பது எமது கணிப்பாகும். இந்த விடயம் நிட்சயம் இப்பிரதேசத்தின் ஒற்றுமையையும், பிரதேசவாதத்தையும் உச்சகட்டத்துக்கு இட்டுச் செல்லப்போகிறது என்ற விடயத்தை இந்த இடத்தில் பதிவிட விரும்புகிறோம்.

    ReplyDelete
  3. சித்தீக் காரியப்பரின் செய்தியே தவிர அமைச்சரவையின் செய்தி அல்ல. நான்கு பிரேச சபைகளின் எல்லைகளும் இனங்காணப்பட்டதன் பிட்பாடே இந்த பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் கல்முனை மாநகர சபை முஸ்லீம் மக்கள் உறுதியாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். அதட்காக இப்பிரதேச மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து உடனடியாக செயட்படுவார்கள் என்றும் நம்புகிறோம். நிட்சயம் பிரதேச வாதிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
    இது மிகவும் இலகுவாக நடக்கப்போகின்ற விடயம் அல்ல. இதில் மாபெரும் சிக்கல் உள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரமும், அரசியல் இருப்பும் இந்த விடயத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட போகிறது என்பதை இந்த இடத்தில் சுட்டி காட்ட விரும்புகிறோம். தமிழ் தரப்பும் முஸ்லீம் தரப்பும் இதில் இணக்கப்பாடு காணுவது என்பது இலகுவான விடயம் அல்ல. நிட்சயம் இந்த விடயம் கடும் சச்சரவையும் குழப்பங்களையும் உருவாக்கும் என்பது எமது கணிப்பாகும். இந்த விடயம் நிட்சயம் இப்பிரதேசத்தின் ஒற்றுமையையும், பிரதேசவாதத்தையும் உச்சகட்டத்துக்கு இட்டுச் செல்லப்போகிறது என்ற விடயத்தை இந்த இடத்தில் பதிவிட விரும்புகிறோம்.

    ReplyDelete
  4. சாய்ந்தமருது மக்களின் வெற்றியை கன்டு கடுக்குதா?

    ReplyDelete
  5. சாய்ந்தமருது மக்களின் வெற்றியை கன்டு கடுக்குதா?

    ReplyDelete
  6. இதை சாய்ந்தமருதின் வெற்றியாக மாத்தரம் பார்க்க வேண்டாம் மக்களே கல்முனையை பாதுகாக்க முற்பட வேண்டும். இதனால் கல்முனை மக்களுக்கு வரும் பாதகமான விடையங்களையும் பார்க்க வேண்டும். இதனால் பின்னாடி பாதிக்கப்படுவது நீங்களும்தான் என்பதை ஞாபகப்படுத்திக்
    காெள்ளுங்கள். நாட்டில் முஸ்லீம்களுக்கு நிலவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த விடயம் உகந்ததா இல்லை முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது ஆகவே நடு நிலையாக சிந்தித்தால் நன்றாக புரியும்.

    நான் கல்முனையும் இல்லை சாய்ந்தமருதும் இல்லை

    ReplyDelete
  7. Ethuvum Allahvin naattapadeeyae nadakum....in sha ALLAH..evarum ethuvum seya mudiyathu... sainthamaruthu makkal thankal unity ai velipaduthi irukaanga.. athai paaraatathaan vaendum. Otrumai enum palatha kaiyitrai patree pidikka islam solhirathu... atahai avarhal seithu irukanga... maa shaa Allah....
    Pirachanai hal varum pothu thaan... unmaihal sila veli varum... ippothaya ..santha thee halitku theriyathu... sainthamaruthu vin unmai yaanaa ellai thatpothaya kalmunai kudyin naharamndafa ellaihalahum enpathu... tution koduthu padithu koduthaalum intha alavuku solla mudiyàthu...bt.puratsee enpathu puhinthal puryatha puthirukum vidai kidaikirathu... maa shaa ALLAH...
    Naan ukalidam kaetkiraen .....enna venraal... intha sainthamaruthuvin unmaiyaana ellai yinai neenga surandiya pothu... aen neenga seira varalaatruth thavaruhal unkaluku vilanka ille yaaaa or vilankatha mathiree irukkeengalaaa???

    ReplyDelete

Powered by Blogger.