Header Ads



30 மில்லியன் ரூபாய் படகு, முதல் பயணத்திலேயே தீக்கிரை - ஹிக்கடுவையில் சம்பவம்


திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ‘ஜனத் புத்தா -2’ மீன்பிடி படகு ஹிக்கடுவையிலிருந்து 51 கிலோமீற்றர் தூரத்தில் தீப்பற்றி எரிவதாக, மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தகர் ஒருவரால் மீன்பிடி அமைச்சுக்கு மானியத்தின் கீழ் வழங்கப்பட்ட இரண்டு படகுகளும், முதலாவது பயணத்தை ஆரம்பித்த வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

60 அடி நீளமான குறித்த படகின் பெறுமதி 30 மில்லியன் ரூபாய் பெறுமதியானது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளதுடன், இதில் பயணித்த மீனவர்கள், “ ஜனத் புதா 1 இல் சென்ற மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.