Header Ads



இலங்கைக்கு பேஸ்புக் வழங்கிய 2 உத்தரவாதங்கள்

இலங்கையில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்செயல்களை அடுத்து கொண்டு வரப்பட்ட பேஸ்புக் மீதான தடையை இலங்கை அரசாங்கம் சுமார் ஒரு வாரத்துக்கு பின்னர் நீக்கியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தினருடன் ஜனாதிபதியின் செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தடை நீக்கப்பட்டது.

தனது அறுவுறுத்தலின் பேரில், ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகளுடன் தனது செயலர் பேசியதாகவும், அதில், வன்செயல்களை தூண்டவும், வெறுப்புணர்வுப் பேச்சுக்களை தூண்டவும் அனுமதிக்க மாட்டோம் என்று அந்த அதிகாரிகள் உத்தரவாதம் தந்ததாகவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

No comments

Powered by Blogger.