அவசரகால நிலைமையை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை
அவசர காலநிலைமையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அவசகார கால நிலைமையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் கூறினார்.
வன்முறைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் முழுமையாக கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடியும் வரை இந்த அவசர காலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் எனவும் நாம் கோரியிருக்கின்றோம்.
இந்த வன்முறைகள் வேறு பிரதேசங்களிலும் ஏற்படாமல் இருப்பதற்கும் அல்லது அவ்வாறு ஏற்படுகின்ற போது முஸ்லிம்களுக்கு பாரிய விளைவுகள் ஏற்படாமலிருப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு சில ஆலோசனைகளை நான் ஜனாதிபதிக் கும் பிரதமருக்கும் எழுத்து மூலமாக கோரியுள்ளேன். இது தொடர்பில் தொடர்ச்சியாக சகல தரப்பினரோடும் கலந்துரையாடவுள்ளேன் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
Post a Comment