Header Ads



பேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக, வீடியோ பதிவேற்றிய 2 தமிழர்கள் கைது

பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட கல்முனையைச் சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை பாரதி வீதி மற்றும் சின்னத்தம்பி வீதிகளை சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கண்டியில் எற்பட்டிருந்த கலவரத்தின்போது குறித்த இரண்டு நபர்களும் பேஸ்புக்கில், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன வெறுப்பு கருத்துக்களை காணொளியாக பதிவேற்றியிருந்தனர்.

இது தொடர்பில் முஸ்லிம் தரப்பினரால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டின்படி குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.