மொரகஹமுலயில் 24 பேர் கைது
தெல்தெனிய – மொரகஹமுல பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் சகோதரருக்கான விற்பனை நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 9.00 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரும், இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், தெல்தெனிய பகுதியில் பாதுகாப்பு பலப்பத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Post a Comment