Header Ads



அம்பாறைக்கு 2 பொலிஸ் குழுக்கள் விரைவு


அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பற்றி ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் இன்று வெள்ளிக்கிழமை (2) அம்பாறைக்கு சென்றுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபருக்கு வழங்கிய உத்தரவின் பேரிலேயே இக்குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த 2 குழுக்களும் அம்பாறை வன்முறை தொடர்பிலும், அதனுடன் தொடர்புடையவர்கள், வன்முறைக்கான காரணம், அதன் பின்னணி, அம்பாறை பொலிஸாரின் செயற்பாடு பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித்த சேனாரத்தினா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் இதுதொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. Every time, sending the force after damage is made. You are fool or we are fool.

    ReplyDelete

Powered by Blogger.