உலகின் மிகச்சிறந்த ஆசிரியருக்கான விருதுடன், 15 கோடி பரிசை வென்றவர்
உலகின் மிகச் சிறந்த ஆசிரியராக பிரிட்டனைச் சேர்ந்த ஆசிரியை அன்ட்ரியா ஸஃபீராகோ தெரிவு செய்யப்பட்டு 10 இலட்சம் அமெரிக்க டொலர் (சுமார் 15 கோடி ரூபா) பரிசை வென்றுள்ளார்.
துபாயில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வைபவமொன்றில் அன்ட்ரியா ஸஃபீராகோவுக்கு மிகச் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
இந்தியத் தொழிலதிபரான சன்னி வர்கியினால் ஸ்தாபிக்கப்பட்ட வர்கி மன்றமானது, குளோபல் எடியூகேஷன் அன்ட் ஸ்கில்ஸ் ஃபோரம் எனும் விழாவை வருடாந்தம் நடத்தி, உலகின் சிறந்த ஆசிரியருக்கான விருதை வழங்குகிறது.
இம்முறை 4 தடவையாக நடத்தப்பட்ட உலகின் மிகச் சிறந்த ஆசிரியர் விருது விழாவுக்காக 173 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
10 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில், துருக்கி, பிரிட்டன், தென் ஆபிரிக்கா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, பிரேஸில், பெல்ஜியம், அவுஸ்திரேலியா, நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆசிரிய ஆசிரியைகள் இடம்பெற்றிருந்தனர்.
நேற்றுமுன்தினம் துபாயில் நடைபெற்ற வைபவத்தில் பிரிட்டனின் அன்ட்ரியா ஸஃபீராகோ முதலிடம் பெற்று, உலகின் மிகச் சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.
அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உப ஜனாதிபதியும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் இவ்விருதைக் கையளித்தார்.
38 வயதான அன்ட்ரியா ஸஃபீராகோ, லண்டனின்’ பிறென்ட் பகுதியிலுள்ள அல்பேர்ட்டன் சமூக கல்லூரியில் கலை மற்றும் ஆடைத்துறை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு அன்ட்ரியா கற்பிக்கிறார். இம்மாணவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அம்மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறை செலுத்தும் ஆசிரியை அன்ட்ரியா, மாணவர்களின் பெற்றோர்களுடன் வகுப்பறையிலும் அவர்களின் வீட்டிலும் இணைந்து பணியாற்றுகிறார். இதனால் அப்பெற்றோருக்கு உற்சாகமூட்டுவதற்காக அப்பெற்றோர்களின் தாய் மொழிகளிலும் அடிப்படை வார்த்தைகளைக் கற்றிருக்கிறார் அண்ட்ரியா. தமிழ் உட்பட 35 மொழிகளில் அடிப்படை வார்த்தைகளை அவர் கற்றிருக்கிறாராம்.
பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளெயர், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லார்ட், பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் ஸர்கோஸி அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி அல் கோர் உட்பட பலர் இந்நிகழ்வில் அதிதிகளாக பங்குபற்றினர். உலகின் மிகச் சிறந்த ஆசிரியையாக தெரிவான அன்ட்ரியா ஸஃபீராகோவுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளில் உள்ள ஆசிரியர்களை, இந்த துபாய் அமீரக அதிபரின் கண்களுக்கு தெரிவதில்லை.
ReplyDeleteஇன ஒதுக்களில் முதன்மையானவர்களாக விளங்கும் மேற்கில் உள்ளவர்கள்தான், இவர்களின் கண்களுக்குப் படுகிறது.
இலங்கையில் முஸ்லிம்கள் இருக்கிறார்களா என்பதுகூட, இவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.
தெரிந்தாலும் என்ன - இலங்கையில் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் எரிப்புகள் எல்லாம் இவர்களுக்கு வீடியோ கேம்ஸ் மாதிரி இருக்கும்.
May be so., but we do not have a media to post in Arabic and English.
ReplyDelete