Header Ads



பாடசாலையை சூழ 100 மீற்றர் பகுதியில், சிகரெட் விற்க தடை

பாடசாலைகளைச் சூழ 100 மீற்றர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிகரெட் விற்பனையை தடைசெய்வது குறித்த வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 7ஆம் திகதி வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டே குறித்த தினத்தில் வர்ததமானியை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளை சூழ 500 மீற்றர் எல்லைப் பகுதிக்குள் சிகரெட் விற்பனையை தடுப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்​டிருந்த போதிலும், தற்போது அதன் எல்லையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிகரெட் விற்பனை செய்யும் சட்டத்தை 21 வயது வரை அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.