Header Ads



கூட்டு எதி்ரணி - UFFA உடன்பாடு தொடர்பாக குழு நியமனம்

கூட்டு எதி்ரணிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு, தினேஸ் குணவர்த்தனவும், சுசில் பிரேம ஜெயந்தவும் தலைமை தாங்குகின்றனர்.

அதேவேளை, இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான அமைச்சர் துமிந்த சில்வா பங்கேற்கவில்லை. அவர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாகவும், அந்தக் கொள்கைளை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

எனினும் தாம் ஐதேகவில் இணையப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் முயற்சிகள் தொடர்ந்தால், சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து துமிந்த சில்வா விலகலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.