Header Ads



"SAVE GHOUTA" யா அல்லாஹ், சிரியா தேசத்து முஸ்லிம்களை பாதுகாப்பாயாக..!


மனித குல எதிரி அசத்தின் ஷெய்த்தானிய்ய படைகளினால் கொன்று குவிக்கப்படும் அப்பாவிகளான சிரியா நாட்டு மக்கள் மக்கள்.

சிரியாவில இடம்பெறும் கொடிய யுத்தத்தின் தொடராக தற்போது Ghouta நகரில் கடந்த நான்கு நாட்களாக தனது நாட்டு மக்களையே கொடிய இரசாயண நச்சு வாயுக்களாலும் போர் விமானங்களினாலும் அசத்தினுடைய காட்டுமிராண்டிகள் கொன்று குவிக்கின்றனர். இதுவரைக்கும் குழந்தைகள், பெண்கள் உட்பட 450க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் காவு கொல்லப்பட்டுள்ளது.

சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு நாடுகளின் தயவோடு சிரியா முஸ்லிம்களை முழுமையாக கருவறுக்கும தந்திரோபாயம் தசாப்தங்கள் கடந்தும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் பத்து இலட்சத்திற்கும் அதிகமான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதோடு, சிரிய தேசமே மனிதர்கள் வாழ முடியாத சுடுகாடாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சிரிய முஸ்லிம்களை ஷெய்த்தானிய்ய படைகளிடமிருந்து மீட்டெடுக்கும் பலமான முயற்சியில் ஈடுபட்டுள்ள துருக்கியினது செயற்பாடுகள் பாராட்டத்தக்கதாகும்.

யா அல்லாஹ் எம் சிரிய தேசத்து முஸ்லிம்களை பாதுகாப்பாயாக! அம்மக்களினது விடுதலைக்காக போராடுகின்ற உண்மையான ஈமானிய்யா போராளிளின் பாதங்களை உறுதிப்படுத்தி அவர்களுக்கு வெற்றியை பரிசளிப்பாயாக! Abu Ariya






1 comment:

  1. யாஅல்லாஹ் சிரியாவின் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பிள்ளைகள், வயோதிபர்கள், பெண்கள் பதவி மோகமும், அரக்கனும் கொலைகாரனுமாகிய அஸதின் அநியாயம் தாங்காது படுகொலைசெய்யப்படுகின்றார்கள். அவர்கள் செய்த பாவத்தை மன்னித்து யாஅல்லாஹ் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்து அவர்களுக்கு அருள் பாலிப்பாயாக. அவர்களுக்கு அக்கிரமம் செய்து கொலைசெய்யும் அனைத்து அநியாயக்காரக் கூட்டங்களையும் அழித்து ரப்பே! உனது தண்டனையை அந்த அநியாயக்காரர்கள் மீது அனுப்புவாயாக. யா அல்லாஹ் கிருபையுள்ள ரஹ்மானே எங்கள் துஆவை அங்கீகரித்து அந்த அப்பாவி மக்களுக்கு உதவிபுரிவாயாக. அவர்களின் நெருக்கடிகளை நீக்கி ஈருலக வாழ்விலும் அவர்களுக்கு நிம்மதியையும் வளமான வாழ்க்கையும் அருளுவாயாக. யா அல்லாஹ் எங்கள் பணிவான பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக.ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.