Header Ads



ஜனாதிபதியின் வாளை எங்கு வைப்பது? கூறுவதற்கு வெட்கப்படும் காமினி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாளை வைக்க வேண்டிய இடம் எங்கு என்பதை பகிரங்கமாக கூற முடியாதுள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்மற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

தற்பொழுது மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படப் போகின்றது. திருடர்களைப் பிடிக்கும் நடவடிக்கை எவ்வாறு அமையும் என எதிர்பார்க்கின்றீர்கள் என அவரிடம் வினவியபோதே இவ்வாறு கூறினார்.

தற்பொழுது தேர்தல் முடிந்து விட்டது. திருடர்களைப் பிடிக்கம் நடவடிக்கையும் அவ்வளவுதான். தேர்தலுக்காகத் தான் நாடகம் நடித்தார்கள்.

இந்த தேர்தலில் பெற்ற தோல்விதான் இந்த அரசாங்கத்துக்கு அமைச்சரவையை மீண்டும் சீர்செய்ய வைத்தது. இந்த இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி சேர்ந்ததனால் தோல்வியடைந்தது கூட்டணியல்ல, சுசில் பிரேம்ஜயந்த் உட்பட குழுவினரே எனவும் அவர் மேலும் கூறினார். -Dc-

No comments

Powered by Blogger.