Header Ads



கோதபாயவிற்கு எதிராகவும், வாளை வீசுமாறு சம்பிக்க கோரிக்கை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராகவும் வாளை வீசுமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரியுள்ளார். அர்ஜூன் அலோசியஸிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதனைப் போன்று, கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். 

மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எமது அரசாங்கத்தில் யாரேனும் திருடினால் அவர்களுக்கு தண்டனை விதிக்கத் தயார் என நாம் கூறியிருந்தோம், அதன்படி நாம் கடந்து கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி வழக்கு தொடர்பில் மட்டுமன்றி அவன்ட்கார்ட் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். அவன்ட்கார்ட் நிறுவனம் அரசாங்கத்திற்கு 12 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு கோதபாய ராஜபக்சவே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எமது அரசாங்கத்தைச் சேர்ந்த சிலரும் அவன்ட் கார்ட் பின்னால் சென்றனர் அவர்களுக்கும் தற்போது வீடு செல்ல நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அலோசியஸிற்கு அமுல்படுத்திய சட்டத்தை கோதபாயவிற்கும் அமுல்படுத்துமாறு நாம் கோருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அதேபோல் - இலங்கையில் இனவாதத்தின் அச்சாணியாக இருக்கும் இந்த நாய்மீதும் வாள்வெட்டு விளவேன்டும்............

    ReplyDelete

Powered by Blogger.