Header Ads



மஹிந்த குழுவினரினால், பணம் கொடுத்து சதி முயற்சி

-Dc-

சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு மிகவும் பொருத்தமானவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவே ஆவார் என சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று (15) மாலை மருதானை சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

வெள்ளை வேன் கலாச்சாரம் தற்பொழுது இல்லை. இருப்பினும், திருடர்களையும், ஊழலில் ஈடுபடுபவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ குழுவினரினால் பணம் கொடுத்து சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனநாயக நீரோட்டத்தில் இருந்து கொண்டு செய்ய முடியாத விடயங்களையும் கூட முன்னின்று நடைமுறைப்படுத்தக் கூடிய சக்தி மிக்க, காத்திரமான ஒரு தலைவர் வேண்டும் எனவும் அந்தப் பதவிக்கு மிகவும் தகுதியானவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனவும் தம்பர அமில தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

Powered by Blogger.