Header Ads



சிறிலங்காவுடன் உறவு பேண விரும்புகிறராம் மோடி

சிறிலங்காவுடன் உயர்மட்டங்களிலான உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, கலாசார அடிப்படையில், உண்மையான பன்மைத்துவத்துடன் வளர்ந்து வந்திருக்கிறது.

இந்தப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது எமது பொறுப்பும், எதிர்பார்ப்பும் ஆகும்.

எமது நாடுகளில் உள்ள மக்களின் பரஸ்பர நன்மைக்காக, உயர் மட்டங்களில், குறிப்பாக பொருளாதாரத் துறையில், நமது உறவை அதிகரித்துக் கொள்வதற்கு தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன். தயவுசெய்து எனது கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்களின் நல்ல ஆரோக்கியம், தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் நட்புடைய சிறிலங்காவின் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு எனது வாழ்த்துக்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.