பிரதமருக்கு பிறந்த "ஐடியா"
தேர்தல் காலம் என்பதால் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் செம பிசி.... பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டும் விதிவிலக்கா என்ன? செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கவும் வேண்டும்...நேரத்தை திட்டப்படுத்தவும் வேண்டும்.
பிரதமருக்கு ஐடியா ஒன்று பிறந்தது.
தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் அரசியல் செய்தியாளர்களை அலரி மாளிகைக்கு வரச் சொன்னார்...தாம் காலியில் நடைபெறும் கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்ளதால் தனது வாகனத்தில் ஏறும்படி அவர்களை பணித்த பிரதமர் பயணிக்கும்போதே பேட்டியை வழங்கினாராம்.
காலிக்கு போகும்போது சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளுக்குப் பேட்டி...காலியிலிருந்து கொழும்பு வரும்போது தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் பேட்டி. நேரமும் மிச்சம்...பத்திரிகையாளர்களுக்கும் பிரதமருடன் காலி வரை ஒரு ட்ரிப்.
நேரத்துடன் போராடும் அரசியல்வாதிகளுக்கு பிரதமர் ஒரு வழியை காட்டியிருக்கிறார் ....
Post a Comment