Header Ads



அம்பாறையில் இடம்பெற்றது என்ன..? முழு விபரங்கள் இதோ

அம்­பா­றையில் பள்­ளி­வாசல் மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது பெரும்­பான்­மை­யின குழு­வினர் தாக்­குதல் நடத்­தி­ய­துடன் வாக­னங்­க­ளையும் தீக்­கி­ரை­யாக்­கி­யுள்­ளனர். இதனால் அம்­பாறை நகர பகு­தியில் பெரும் பதற்றம் ஏற்­பட்­டுள்­ளது. 

அம்­பாறை - டி.எஸ்.சேன­நா­யக்க வீதியில் உள்ள ஜும் ஆப்பள்­ளி­வாசல், பள்­ளி­வாசல் காரி­யா­லயம், தங்­கு­மிடம், அதனை அண்­மித்து அமையப் பெற்­றுள்ள முஸ்லிம் வர்த்­த­கர்­க­ளுக்கு சொந்­த­மான மூன்று உண­வ­கங்கள், ஒரு பல­ச­ரக்குக் கடை ஆகி­ய­வற்றின் மீதே பெரும்­பான்மை இனக் குழு­வொன்று தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­துடன் அங்­கி­ருந்த முஸ்­லிம்கள் மீதும் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த சம்­ப­வத்­தினால் அம்­பாறை நகரில் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு முதல் நேற்று காலை வரை பெரும் பதற்­ற­மான சூழல் நில­வி­ய­துடன், பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் மற்றும் மேல­திக பொலிஸ் படை­ய­ணி­யி­னரின் பாது­காப்­புடன் நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

 எனினும் கல­வரம் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­பதால் நேற்றும் முழு­மை­யாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் பாது­காப்பு அம்­பாறை நக­ருக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், குறித்த தாக்­குதல் தொடர்பில் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

' நிலை­மையை நாம் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­துள்ளோம். தற்­போது பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் பாது­காப்பு கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். தேவை ஏற்­ப­டு­மாயின் இரா­ணு­வத்தை அழைக்­கவும் தயங்­க­மாட்டோம். இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், பிர­தே­சத்தின் சி.சி.ரி.வி. காணொ­ளிகள் ஊடாக சந்­தேக நபர்­களை அடை­யாளம் காணும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்றும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.

 நடந்­தது என்ன?

நேற்று முன் தினம் இரவு 10.30 மணி­ய­ளவில் அம்­பாறை, டி.எஸ்.சேன­நா­யக்க வீதியில் அமைந்­துள்ள நியூ காசிம் உண­வ­கத்­துக்கு சில பெரும்­பா­ன்மை இன இளை­ஞர்கள் சாப்­பி­டு­வ­தற்­காக சென்­றுள்­ளனர். இதன்­போது அவர்கள் சாப்­பிட கொத்து ரொட்டி, பராட்டா கோரி­யுள்ள நிலையில் அவை தயார் செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­போது பரி­மா­றப்­பட்ட உணவில் வெள்ளை நிறத்தில் ஏதோ இருந்­தமை தொடர்பில் சுட்­டிக்­காட்டி, கருத்­தடை அல்­லது இன விருத்­தியை தடுக்கும் வண்­ண­மான பதார்த்தம் கொத்து ரொட்­டியில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக கூறி அந்த இளை­ஞர்கள் குழு கடும் வாக்கு வாதத்தில் ஈடு­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து அந்த குழு­வினர் உண­வ­கத்தின் காசாளர் கதி­ரையில் இருந்த இளை­ஞ­ருடன் இது தொடர்பில் கடும் தொனியில் வாக்கு வாதப்­பட்டு, அவர் பேசு­வதை வீடி­யோவும் எடுத்­துள்­ளனர்.

கருத் தடை மருந்து போட்­டீர்­களா?

இதன்­போது அந்த இளைஞர் குழு, நீங்கள் உண­வுக்கு கருத்­தடை மாத்­திரை போடு­கின்­றீர்கள் தானே என தொடர்ச்­சி­யாக உரத்த குரலில் கேட்­ட­போது அதற்கு காசாளர் முதலில் இல்லை என்றும் பின்னர் அச்­சு­றுத்தும் பாணியில் கேட்­கப்­படும் போது ஆம் எனவும் பதி­ல­ளிக்கும் வீடியோ பதிவு செய்­யப்­பட்டு அது சமூக வலை­த்­த­ளங்­க­ளிலும் பரப்­பப்பட்­டுள்­ளன. எனினும் தன்னை கட்­டா­யப்­ப­டுத்­தியே, சிங்­கள மொழி சரி­யாக தெரி­யாத நிலையில் அந்த வீடி­யோவை அவர்கள் எடுத்­துள்­ள­தாக காசாளர் தரப்­பினர் தெரி­வித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது

பஸ்­ஸிலும், மோட்டார் சைக்­கி­ளிலும் வந்த குழு­வினர்

 இந் நிலையில் நள்­ளி­ரவு 12.00 மணி அளவில் பஸ் வண்­டி­யொன்­றிலும், 50 வரை­யி­லான மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் பெரும்­பா­ன்மை இன குழு­வினர் குறித்த உண­வகம் அமைந்­துள்ள இடத்­துக்கு வந்­துள்­ளனர். அங்கு வந்­த­வர்கள் அரா­ஜ­க­மான முறையில் நடந்­து­கொண்­டுள்­ள­துடன் உண­வகம் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

பள்­ளி­வாசல், முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல்:

இந் நிலையில் அந்த உண­வகம் மீது மட்­டு­மல்­லாமல் அப்­ப­கு­தியில் அமைந்­துள்ள மேலும் இரு உண­வ­கங்கள், பல­ச­ரக்கு கடை ஆகி­ய­வற்றின் மீதும் தாக்­குதல் நடாத்­தி­யுள்ள அந்த குழு­வினர் அத­னுடன் நிற்­காது பள்­ளி­வாசல் மீதும் அத்து மீறி­யுள்­ளனர்.

முதலில் பள்­ளி­வாசல் மதிலை முற்­றாக உடைந்­தெ­றிந்­துள்ள அவர்கள், பின்னர் பள்­ளி­வா­சலின் கண்­ணா­டிகள், ஜன்னல், கத­வு­களை உடைத்­துக்­கொண்டு பள்­ளி­வா­ச­லுக்கு சேதம் விளை­வித்­துள்­ள­துடன் அங்­கி­ருந்த புனித அல் குர் ஆன் பிர­திகள் உட்­பட சமய நூல்­களை தீயிட்டு எரித்­துள்­ளனர். அத்­துடன் பள்­ளி­வா­ச­லுடன் இணைந்­த­தாக அமைந்­துள்ள பள்­ளி­வாசல் நிர்­வாக காரி­யா­ல­யத்­தையும் அடித்­து­டைத்து, பள்­ளி­வாசல் வளா­கத்தில் அமைந்­துள்ள தங்­கு­மி­டங்­களில் தங்­கி­யிருந்­த­வர்கள் மீது தாக்­குதல் நடாத்தி அந்த கட்­டி­டங்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இதன்­போது அந்த தங்­கு­மி­டங்­களில் தங்­கி­யி­ருந்­த­வர்கள் அங்­கி­ருந்து தப்பி பின்னால் உள்ள காட்­டுப்­ப­கு­திக்கும் ஏனைய பாது­காப்­பான இடங்­க­ளுக்கும் ஓடி தப்­பித்­துக்­கொண்­ட­தாக சம்­ப­வத்­துக்கு முகம் கொடுத்த நபர் ஒருவர் தெரி­வித்தார்.

தாம­த­மாக வந்த பொலிஸார்

இந்த வன்­மு­றைகள் இவ்­வாறு நடந்­தேறும் போது, பள்­ளி­வா­சலில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் இருந்த பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள்  ஸ்தலத்­திற்கு வர­வில்லை எனவும் அவர்கள் தாக்­கு­தல்­களும் சேதப்­ப­டுத்­தல்­களும் நிறை­வ­டைந்த பின்னர் ஸ்தலத்­திற்கு வந்­த­தா­கவும்  சம்­ப­வத்­துக்கு முகம்­கொ­டுத்த மக்கள் குற்றம் சாட்­டு­கின்­றனர்.

சுமார் 3 நிமி­டங்­களில் சம்­பவ இடத்தை வந்­த­டைய கூடி­ய­தாக இருந்த போதிலும் தாக்­குதல் ஆரம்­பித்து ஒன்­றரை மணி நேரத்தின் பின்­னரே பொலிஸார் ஸ்தலத்­திற்கு வந்­த­தாக அவர்கள் கூறு­கின்­றனர்

இது தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­க­ர­விடம் வின­விய போது, அது குறித்து கேசரி கேட்கும் வரை தான் அறிந்­தி­ருக்­க­வில்லை எனவும், அவ்­வா­றான முறைப்­பா­டுகள் இருப்பின் விரி­வான விசா­ர­ணைகள் நடை­பெறும் என்றும் அவர் கூறினார்.

எம்.எப்.எம்.பஸீர்

No comments

Powered by Blogger.