Header Ads



மஹிந்தவின் வெற்றியை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிரான மிரட்டல்களும் ஆரம்பம் - பசிலிடம் முறையிட்ட அமீன்

மஹிந்தவின்  தேர்தல் வெற்றியை தொடர்ந்து சில பிரதேசங்களில்   முஸ்லிம்களுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் தான் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவை அறிவுறுத்தியுள்ளதாகவும் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என் எம் அமீன் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் ,

அரசியல் காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை முன்னிறுத்தி ஓரிரு சம்பவங்கள் நாட்டின் சில பகுதிகளில் பதிவாகியிருப்பதாகவும் இது தொடர்பில் தான் பெசில் ராஜபக்‌ஷவை அறிவுறுத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் தான் அவசரமாக கவனமெடுப்பதாக கூறியுள்ள பெசில் ராஜபக்‌ஷ கடந்த தேர்தல்களை விட முஸ்லிம்கள் தங்களுக்கு அதிகமாக ஆதரவு வழங்கியுள்ளதாகவும் எவ்வாறாயினும் இந்த சந்தர்பத்தில் அரசியல் முரண்பாடுகளை இனவாத பிரச்சினையாக்க கூடாது எனவும் குறிப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுன தங்கள் ஆதரவாளர்களுக்கு விஷேட வேண்டுகோள் ஒன்றை உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. Mahindavuk support panniya Nooorulss.....Sattaars.... Beruwala independance groups...? where are they...?

    ReplyDelete

Powered by Blogger.