Header Ads



"மண்கவ்வினால் கதவடைப்பு" - கபீருக்கு பறந்த உத்தரவு


"உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்களுக்கே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும்'' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்தகையோடு மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. எனவே, குட்டித்தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.கவின் வேட்பாளர்கள் சிலர், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளனர்.

இந்நிலையிலேயே பிரதமரிடமிருந்து மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பில் சகல வேட்பாளர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளரான கபீர் ஹாசீமுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.