Header Ads



முக்கிய அலுவலகங்கள் உள்ள, ஒரேயொரு பள்ளிவாசலுக்கு உதவுமாறு கோரிக்கை


பத்தரமுல்ல ஜூம்ஆப் பள்ளிவாசல் அருகில் உள்ள 21.59 பேர்ச்சஸ் காணியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஜூம்ஆப் பள்ளி நிர்வாகம் நிதி சேகரிக்கின்றது.

இக் காணிக்காக 57 மில்லியன் தேவைப்படுகின்றது. ஏற்கனவே 27 மில்லியன் ருபா காணிச் சொந்தக்காரருக்கு கொடுக்கப்பட்டு மிகுதிப் பணம் வழங்கவேண்டிய நிலையில் உள்ளது. 

பாராளுமன்றம், கல்வியமைச்சு, செத்சிரிபாய, பரீட்சைத் திணைக்களம். நீா்வழங்கள் அமைச்சு, பாஸ் போட், அடையாள அட்டைத் திணைக்ளம், செத்சிரிபாயவில் உள்ள 14 அரச அமைச்சுக்கள், அதிகார சபைகள், கணக்காய்வாளா் நிறுவனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, போன்ற அரச நிறுவனங்களில் தொழில் செய்யும் முஸ்லீம்கள், ஒவ்வொரு நாளும் அடையாள அடடை, விசா, பாஸ் போட் எடுக்க வரும் முஸ்லீம்கள் தொழுவதற்காக உள்ள ஒரே ஒரு பள்ளிவாசல் இந்தப் பள்ளிவாசல் ஆகும்.

 இந்தப் பள்ளி வாசலுக்கு விசாலமான காணி, கட்டிடங்கள் விஸ்தீரணப்படுத்தப்படல் வேண்டும். கடுவலை தொட்டு மாலபே அத்துள்கோட்டே தலவத்துக்கொட பத்தரமுல்ல பகுதி வாழ் முஸ்லீம்களுக்கு உள்ள ஒரே ஒரு பள்ளிவாசல் இப் பள்ளிவாசலாகும்.செத்திரிபாய அருகில் (பாஸ் போஸ்ட் அருகில் ) கணத்தை வீதியில் கணத்தைக்கு அருகில் இவ் ஜூம்ஆப் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இதற்காக தனவந்தா்கள், பள்ளிவசாலுக்கு உதவுவோா் கீழ் உள்ள முகவரி அல்லது வங்கியுடன் நிதியுதவி வழங்குமாறு கேட்கப்படுகின்றனா். (அஷ்ரப் ஏ சமத்)

1 comment:

Powered by Blogger.