"புத்தளத்தில் அதிக கழுதைகள் இருப்பதால், அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை"
புத்தளம் பிரதேசத்தில் அதிகமாக கழுதைகள் இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர் எனவும் இதனால் இப்பிரதேச மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பொறுப்பான அமைச்சுப் பதவியொன்றை இந்த அரசாங்கம் இதுவரை வழங்கவில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்தார்.
இன்று -25- காலை புத்தளம் வைத்தியசாலைக்கு வருகைதந்த அவர் இந்தக் கருத்தைக் கூறினார்.
இன்று வழங்கப்படவுள்ள புதிய அமைச்சரவை சீர்திருத்தத்தில் புத்தளத்துக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் ஏதாவது வழங்கப்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
-Dc-
Post a Comment