Header Ads



"எமது கட்சியின் தலைவரை, நாங்கள் நீக்கமாட்டோம்"

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிடின், அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“கூட்டு அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகிக் கொண்டால், ஐதேக தனித்து ஆட்சியமைக்கும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து எமது கட்சியின் தலைவரை நாங்கள் நீக்கமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.