அவசரமாக கூடவுள்ள யானைகள்
பாராளுமன்றத்தில் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்ச்சைக்குரிய இரண்டு விசாரணை அறிக்கைகள் மீதான விவாதம் மற்றும் மாரப்பன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயதானங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு நாளை வெள்ளிக்கிழமை அவசரமாக கூடுகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ள மத்திய செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னதாக எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவிருக்கும் சர்ச்சைக்குரிய பாரிய ஊழல் மோசடி மற்றும் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழு அறிக்கைகள் இரண்டு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் ஐ.தே.க. எவ்வகையான விடயங்களை பேசுவது என்பது தொடர்பாகவும் இதன்போதும் கலந்துரையாடப்படவுள்ளது.
அதன்போது ஐ.தே.க.வின் உப தலைவர் பதவியிலுள்ள ரவி கருணாநாயக்கவை தற்காலிகமாக நீக்க வேண்டுமென திலக் மாரப்பனவின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட குழு முன்மொழிந்துள்ள நிலையில் அது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடக்கவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பாகவிருக்கும் ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் பதவியிலிருந்து இவ்வாறு தற்காலிகமாக நீக்குவதென்பது கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி சபை வாக்காளர்கள் மத்தியில் சில குழப்பகரமான சூழலை ஏற்படுத்தும் நிலை காணப்படுவதால் இது தொடர்பாக இக்குழுக் கூட்டத்தில் பாரிய கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் இந்த இரண்டு அறிக்கைகள் மற்றும் திலக் மாரப்பன குழுவினால் முன்மொழியப்பட்ட யோசனைகள் தொடர் பாக செயற்குழுக் கூட்டத்தின்போது ஆரா யப்படவுள்ளது.
Post a Comment