Header Ads



மைத்திரி, ரணில், சந்திரிக்கா பற்றி மகிந்தவின் நக்கல் பேச்சு

நாட்டில் கடந்த காலங்களில் தமிழ், முஸ்லீம் காலாசார நடனங்கள் சுதந்திரதின விழாவை அலங்கரித்தன, ஆனால் இலங்கையின் ‘70ஆவது’ சுதந்திரத்தினம் கொண்டாட்டங்களில் லெப்டொப் டான்ஸ் என்ற ஒரு வகை நடனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று -03- இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாக வாக்குறுதியளித்தவர்கள் அதனை நிறைவேற்றீனார்களா? இல்லை. ஆகவே மலையக தலைவர்களிடம் அதனை வாங்கி தந்த பின்னர் வாக்கு கேட்கவருமாறு நீங்கள் கேட்கவேண்டும்.

நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில் நுவரெலியாவையும் ஏலத்தில் விற்க ஆதயத்தப்படுகின்றனர்.

தற்போது எல்லா சந்தர்பங்களிலும் குடும்ப அரசியல் என்று என்னை தூற்றுகின்றனர், ஆனால் ஜனாதிபதிக்கு குடும்ப அரசியல் இல்லாவிட்டாலும், தனியான ஒருவகை குடும்ப ஆட்சி உள்ளது.

எனவே மலையக மக்கள் ஏமாற்றமடைய வேண்டாம், மலையகத்திற்கு ஒரு இலட்சம் வீடுகளை வழங்குவதாக கூறினர் அதுவும் நடைபெறவில்லை.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதே எனது கொள்கை.

நாட்டை பிரிப்பதற்கு எதிராக பெல்லன்வில் விமல ரத்ன தேரர் உள்ளிட்டோர் போராடினர் ஆனால் துரதிஸ்டவசமாக அவர் இன்று இயற்கை எய்தியுள்ளார். அது முழு நாட்டுக்கும் ஒரு இழப்பாகும்.

இந்த லெப்டொப் டான்ஸை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆடுகின்றார்கள். 

அதை சந்திரிக்கா அம்மையார் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு ஆடுகின்றார்.
எனவே நாடு என்னால் அபிவிருத்தி கண்டுள்ளது. ஆகையினால் எம்மோடு கைகோர்த்து வெற்றிவாகை சூடுவோம். நாட்டின் அபிவிருத்தியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வோம்" என்றார்.

No comments

Powered by Blogger.