Header Ads



மடிக்கணினி நடன, நிகழ்வு நிறுத்தப்பட்டது


இன்றைய சுதந்திர நாள்நிகழ்வில் இடம்பெறவிருந்த மடிக்கணினி நடன நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகள் மடிக்கணினிகளுடன், நடன நிகழ்வு ஒன்றுக்கு தயாராகி வந்தனர். காலிமுகத்திடலில் ஒத்திகைகளிலும் பங்கேற்றிருந்தனர்.

எனினும், நேற்று நடந்த ஒத்திகையின் போது,  நடனமாடிய மாணவிகளின் கைகளில் மடிக்கணினிகள் இருக்கவில்லை.

இதுகுறித்து நடன ஆசிரியை கருத்து வெளியிடுகையில், மடிக்கணினிகளை நீக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால் மடிக்கணினிகள் இல்லாமல் நடனம் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒத்திகைகளின் போது மாணவிகள் மடிக்கணினிகளுடன் நடனமாடும் காட்சிகள், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெரியளவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.