Header Ads



இலங்கையர்களுக்கு அரபு ராச்சிய தொழில் சட்டங்கள் குறித்த, விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை

ஐக்கிய அரபு ராச்சியத்தின் தொழில் சட்டத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வினை இலங்கையர்கள் மத்தியில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அந்த நாட்டின் மனித வளத்துறை அமைச்சர் அல் ஹமாலி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் ஐக்கிய அரபு ராச்சியத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன்மூலம், ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள், அந்த நாட்டின் ஒழுங்குவிதிகளின் அடிப்படையிலான அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று அல் ஹமாலி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.