மகிந்தவின் குடியுரிமையை பறிப்பது, மட்டும் போதுமானதல்ல - பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை பறிப்பது மட்டும் போதுமானதல்ல என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு தடையாக இருக்கும் நபர்களுக்கு எதிராக செயற்பட தற்போதைய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தனது குடியுரிமையை பறிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
அம்பாலாங்கொடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment