Header Ads



ஏமாந்த புதுப் பிரதமர், எரிந்தும் விழுந்தார்

சுதந்திரக் கட்சி தனி அரசமைக்க ஒன்றிணைந்த எதிரணி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பிரதமராகலாம் என பரவலாக நம்பப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியை கோரமாட்டார் என மஹிந்த ஆதரவு அணி அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிரதமர் கனவுடன் சுற்றி வந்தார் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா.

2015 தேர்தலின் போதும் அவர் பிரதமர் கனவுடன் உலாவந்த போதும் அது கனவாக மட்டுமே நிறைவடைந்திருந்தது.இந்த நிலையில் இரண்டாவது தடவையும் பிரதமர் கனவை சுமந்த அவருக்கு மீண்டும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. நல்லாட்சி தொடரும் என்ற அறிவிப்பு அவரின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டது.

பிரதமர் பதவி தொடர்பாக ஊடகங்களும் வேறு சிலரும் அவரிடம் வினவியபோது அமைச்சர் எரிந்து விழுந்ததாக தெரிய வருகிறது.

No comments

Powered by Blogger.