தேர்தலில் வென்றதற்காக, வெற்றிச் சாப்பாடு
கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது காரைதீவு பிரதேசசபைக்காக மாவடிப்பள்ளி வட்டாரத்தை மையப்படுத்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த எம்.ஜலீலும் அவரோடு இணைந்து தேர்தல் களத்தில் பணியாற்றியவர்களும் ஒன்றுகூடி 2000 பேருக்கு உணவு வழங்கி மகிழ்வுறும் நிகழ்வு 2018-02-25 ஆம் திகதி மாவடிப்பள்ளி புர்க்கானியா (சியாரத்) வளவில் இடம்பெற்றது.
தேர்தலின்போது தனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜலீல், எதிர்காலத்தில் கட்சிபேதம் பாராது எல்லோரும் இணைந்து மாவடிப்பள்ளியைக் கட்டியெழுப்ப முன்வருமாறும் இங்கு அழைப்பு விடுத்தார்.
குறித்த விருந்துபசார நிகழ்வில் பள்ளிவாசல் பிரமுகர்கள், உலமாக்கள் வைத்தியர்கள், ஊர்ப்பிரமுகர்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Shonnahanum Chappadum enparhal.
ReplyDelete