பிரதமர், ஜனாதிபதிக்கிடையில் இன்றும் கலந்துரையாடல்
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க விருப்பமுள்ள கட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் 106 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சி தனியான அரசாங்கத்தை அமைக்குமாயின் அமைச்சுப் பதவிகள் 30 வரையும், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் குறைவடையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இதுவரையில் தனியான அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லையெனவும், பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் இன்றும் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் தானும் கலந்துக்கொள்ளவுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டு
Post a Comment