நேற்று இரவும் மைத்திரி - ரணில் சந்திப்பு
அமைச்சரவையில் மாற்றமொன்றை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து அரசாங்கத்தில் இடம்பெற்று வந்த நிச்சயமற்ற நிலைமையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (புதன்கிழமை) இரவு இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவரை மேற்கோள் காட்டி ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment